Tuesday, September 3, 2013

துப்பட்டா.....!!!!!




அழகு ராட்சசியே....!
                  நீ கழுத்து வரை இழுத்து விட்டுச்செல்லும்
                  துப்பட்டா என் மூச்சை நிறுத்துகிறது...!

உன்னை பார்க்கும்போதெல்லாம்
              எல்லை மீறிய என் கண்கள்
              உன் ஏற்ற இறக்கங்களில்
              சிக்கிக்கொண்டு தவிக்கின்றன.......!

கனவுகள்.......



சில வருட போராட்டம்...
பெயர்  சொல்லி அழைத்தே பழக்கப்பட்ட உனக்கு...
அதை  மாற்றி அழைக்கும் நேரம்.....

கண் இமைக்கும்  நேரத்தில்  நம்  கனவு தொடங்கிவிட்டது...
உன் நெஞ்சில் என்னையும் சேர்த்து இப்பொது இன்னொன்று
உன் உடம்பில் எது உரசினாலும் பொறமை படும் என் மனது
இன்று  பெருமை பேசி கொள்கிறது
நான் கட்டிய கயறு உன்னை தீண்டும்போது........

புதுக்கவிதையின் தொடக்கம்....
முதல் முத்தம்........
வார்த்தை கிடைத்த கவிஞனயாய்  .......
மிட்டாய் கிடைத்த குழந்தையாய் .....
பிரசவ வலிக்கு பிறகு முதலில்
குழந்தையின் முகம் பார்க்கும் தாய்யாய்.....
பட்டினிக்கு பிறகு கிடைக்கும் விருந்தாய்.....
பாழைவன மழையாய்.....
மார்கழி பனியாய்.......
தலை தரிக்க கிடைத்த சந்தோஷம் நம்முல்......

இதோ சில கனவுகள் என்னுள்...


உன் முகம் பார்த்து எழ வேண்டும் தினம் .....
காலை வணக்கம் என் இதழ் வழி நுழைந்து
உயிர் வரை பாய வேண்டும்....
நீ முத்தமிட்ட கோப்பையில் பருக வேண்டும் தேனீர்....

உன் சமயால் அறையில் எனக்கும் ஒரு இடம் வேண்டும்..
கவிதையோ.. கதையோ...
இருவரும் இணைந்து படிக்க வேண்டும்....
உன் கை பிடித்தே நடக்க வேண்டும்.....

 நான் எழுதும் கவிதையின்....
முதல் ரசிகை நீ.....
நீ  விட்டுச்சென்ற மிச்ச சொற்கள் தான் 
என் கவிதைக்கு வார்தையகிறது......
கனவோ  கவிதையோ 
உன்னிடம் எழுத வேண்டும் முதலில்;;;

சின்ன வயதில் தூங்கும்போது 
கைபிடித்து  தூங்கும்  அம்மாவின் விரலாய்....
கட்டியணைத்து தூங்கும் தலையணையாய்......
நீ இருக்க வேண்டும்.......

அவசரமாய் வெளியே போகும் உனக்கு.....
உன்னை மிரட்டியேனும் 
ஆசையாய் ஊட்டிவிட வேண்டும்.....

சின்ன சின்ன சண்டையில் 
கண்ணீர் சிந்தும் உன் கன்னத்தினை 
கையில் ஏந்தி பாசமாய் கடிக்க வேண்டும்......

என் மேல் நீ கோவிக்கும் ஒவ்வொரு முறைக்கும் 
ஆயிரம் முத்தம் உனக்கு பரிசாக தரவேண்டும்........

செல்லமாய் நீ என்னை அடிக்கும் திண்டலுக்காகவே 
சின்ன சின்ன தவறுகள் புரிய வேண்டும்....

நான் ஊரில் இல்லா சமயம்..
கண்கலங்கி தொலைபேசியில் குரல் கேட்டு...
முத்தம் தரும் நிமிடத்தில் உன் தொலைபேசியாய் 
நான் இருக்க வேண்டும்.....

என் செல்ல கடியில் ஏற்பட்ட தழும்பை தொட்டுப்பார்த்து 
சந்தோஷம் கொள்வாயோ...??
இப்படி நான் உன் உடம்பில் விட்டுப்போன 
சில பொக்கிஷங்களை பார்த்து ரசித்து கொள்வாயோ உள்ளுக்குள்.....
நான் உன்னை கட்டியணைக்கும் போது 
உடுத்திய சட்டையை பத்திரபடுத்தி வைப்பையோ..???
என் புகைப்படத்துக்கு நீ கொடுத்த முத்தத்தின் ஈரம்....
சத்தமாய் கேட்க்கும்  என் நெஞ்சுக்குள்.....
இரவில் அவசரத்தில் துக்கி எறிந்த உன் உடைகளை 
தேடி கலைத்து போவாய்......
அந்த நிமிடங்களை அசை போடுவயோ மனதுக்குள்....?????
நான்  வரும் வரை........


நிமிடங்கள் கடந்து போகும் வருடங்களாக 
நீயும் நானும் பிரிந்த வேலையில்....

புதிதாய் ஒரு வாழ்க்கை 
சின்ன சின்ன கனவுகள் 
கடந்து போகும் துக்கங்கள்....
கலைந்து போகும் கண்ணீர்கள்.....
சந்தோஷம் மட்டும் வழிந்தோட ...
இறக்க வேண்டும் உன் மடியில் ஒரு நாள்.....

Monday, July 22, 2013

உச்சி முதல் பாதம் வரை




























உன் கூந்தல் சாட்டையால்
என் இதயம் கிழித்தவலே.......!

உன் நெற்றியில் விளையாடும்
வியர்வை துளியாய் அவனோ நான்....!

உன் கண்களில் கைது செய்து வைத்திருக்கும்
சிறுபிம்பம் அவனோ நான்....!

உன் மூக்கின் வழி நுழையும்
சுவாசமாய் அவனோ நான்.......!

தொங்கவிடாதே உன் காதில் அந்த ஜிமிக்கியை
நீ பேசும் போது எல்லாம் உன்னை தொட்டு
பொறாமை பட வைக்கிறது என்னை.....!

இதழை சுழிக்காதே 
அதில் விழுந்த என் இதயம் தெரிகிறது.....!

நீ சிரிக்கும்போது எல்லாம்
தெரிவது உன் பல்வரிசை மட்டும் அல்ல
அதில் பட்டு தெறிக்கும் என் கவிதை சொற்களும் தான்.....!

நான் கவிதை எழுதுவதே 
உன் நாக்கில் விளையாட துடிக்கும்
என் சொற்களின் தவம்.......!

பிரம்மன் படைத்த ஒன்றில் மிகவும்
புனிதம் உன் கழுத்து
இதோ என் மூச்சு காற்று பட துடித்து கொண்டிருகிறது.....
காமத்தின் முதல் புள்ளி.....
உன் கழுத்து......!


நிலச்சரிவில் பிழைத்தவர்கள் ஏராளம்
அனால் உன் துப்பட்டா சரிவில் 
சரிந்து புதைந்த இதயங்கள் எத்தனையோ....!
இதோ அதில் நானும் ஒருவன் ......!

நீ செல்லமாய் என்னை அடிக்க
ஓங்கும் கையில் தான் எத்தனை விதமான 
உணர்சிகள்....! 

இதழில் முத்தமிடும் போது 
தானாகவே உன் கைகளின் விரல்கள் 
என் பின் முடியை கோதும்....!
உன் விரல்களின் இடுக்கில் அடிகடி மாட்டி கொள்ள 
துடிக்கிறது என் இதயம்.....!

தாய்மையின் உயிர்நாடி.....
பெண்மையின் மேன்மை ......
புதிதாய் உயிர் கொடுக்கும்
பெண்மைக்குள் இருக்கும் பிரம்மா.....
அதை போற்றுகிறேன் 
ஒரு மனிதனாய்.....!
உன் தொப்புள்கொடி

உன் உடை கூட நிற்பதில்லை
உன் இடையில் 
ஊசிமுனை இடைஅழகி .....!

நீ நடக்கும் நடையில் 
கிடைக்கும் இடைவெளியில்.......!
மடிந்து கிடக்கிறது 
என் இதயம்.....!
அதை எடுத்து வைத்துகொள்.....!

உன் பாதங்களில் பட்டுத்தெறிக்கும் 
சிறு தூசியாய் நான் இருக்க வேண்டாம்...!
உன் பாதங்களில் ஒட்டிக்கிடக்கும் 
கோடித்தூசியில் நானும் ஒருவனாய் 
இருக்கவே ஆசைபடுகிறது மனது......!

மொத்தத்தில் பிரம்மனால்
நூறு கோடி அழகு பெண்களை 
அழித்து உன்னை சிற்பமாய் 
ஓவியமாய் வடித்துவிட்டு 
அவன் மடிந்திருப்பான் போலும் 
உன்னைபோல் இன்னொரு 
பெண்ணை வடிக்க முடியாமல்......

அவனுக்கென்ன மடிந்துவிட்டான்.......
உன் அழகில் வீழ்ந்து
எழ முடியாமல் தவிக்கும்.....
எத்தனையோ ஆண்களில் 
உன்னை கவர்ந்த கள்வனாய் 
உன் இதயத்தில் இருக்கும் 
வரம் போதும் எனக்கு.....!